குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 ரிஷபம்!!

454

rishabam

ரிஷப இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 3ம் இடத்திற்கு 19.6.2014 வியாழன் அன்று, குரு பகவான் பிரவேசிக்கப் போகிறார். 3ம் இடம் கீர்த்தி ஸ்தானம் என அழைக்கப்படும் இடமாகும்.

தற்காலம் 2ம் இடத்தில் இருக்கும் குரு, கீர்த்தி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் நன்மையா, தீமையா என்று பட்டிமன்றம் வைத்தால், 3ஆம் இடம் நன்மை இல்லை என்று சிலர் கூறலாம், எழுதலாம்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் உங்கள் இராசிக்கு 8ம் இடத்திற்குரிய குரு பகவான், 3ஆம் இடத்திற்கு செல்லுவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்கிற ஜோதிட விதிப்படி யோகமே ஆகும்.

ஆகவே உங்கள் இராசிக்கு 8ற்கும், 11ற்கும் உரிய குரு பகவான், 3ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் இராசிக்கு 7ம் இடம், 9ம் இடம், 11ம் இடங்களை பொன்னான பார்வை செய்வதால், அவ்விடங்கள் மகா பலம் பெற்று வாரி வழங்க இருக்கிறது.

7ம் இடம், திருமணத்தை குறிக்கும் இடம். 9ம் இடம் பாக்கியம் கொடுக்கும் இடம். 11ம் இடம் லாபத்தை கொடுக்கும் இடம். தடைபட்ட திருமணம் நடைபெறும். பழைய சொத்துக்கள் வந்தடையும். மேலதிகாரியின் உதவிகள் தேடி வரும்.

கடல் கடந்து செல்லும் பாக்கியம் வரும். அன்னியர்கள் நட்பும், அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல திருப்பமும் வரும். பெற்றோர்களால் உங்களுக்கு சில நன்மைகள் வந்தடையும்.

திருமணம் ஆனவர்களுக்கு மனைவி மூலமாக ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரி இருப்பின் அவர்களால் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.

பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும் கூட, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வாக்குறுதியை யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம்.

தேவையில்லா செலவு வரும். அதனை குறையுங்கள். பிறகென்ன அன்பவர்களே உங்களுக்கு யோகமோ யோகம்தான். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவானையும் வணங்குங்கள். தொட்டது துலங்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.