குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 சிம்மம்!!

447

simmam

சிம்ம இராசி அன்பர்களே 19.6.2014 வியாழன் அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 12ம் இடத்திற்கு வந்து அமர்கிறார். அதாவது கடகத்தில் அமரப் போகிறார்.

“அய்யய்யோ 12-ல் குரு இருக்கலாமோ” என்று சிலர் பயப்படுவர். பயமே வேண்டாம். அந்த குருபகவான் உங்கள் இராசிக்கு 5ம் வீடு, 8ம் வீட்டின் அதிபதி. ஆகவே 8க்குரிய குரு, 12ல் வந்தால் இராஜயோகத்தை கொடுப்பார். அதாவது 8க்குரியவன் 12ல் வந்தால், “விபரீத இராஜயோகம்”. இனி தொட்டது துலங்கும்.

உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் முன் தலை வணங்குவார்கள். குரு உங்கள் இராசிக்கு 4ம் இடம், 6ம் இடம், 8ம் இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோகம் பெறச் செய்கிறார். ஆகவே தடைபட்ட மேல் படிப்பு தொடரும். புதிய வாகனம் வாங்கும் யோகும் உண்டு.

சொந்த வீடு இல்லையே என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அளவில் தொலையும். தீராத ரோகம் தீரும். கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும். இருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

குடும்ப ஸ்தானத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வ தரிசனம் அதிகரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும்.

ஜீவனத்திற்கு 7ம் இடம் பார்வை பெறுவதால், பங்கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும். கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4ம் இடம் குரு பார்வை பெறுவதால், புத்திர- புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.

முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும். உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடக்கும்.

பொதுவாக 12ல் அமர்ந்த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி வகுப்பார். இது என் கருத்து. ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது.

விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி முன்னேறுங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.