கனடாவில் உயிரிழந்த யாழ் வல்வெட்டித்துறை சேர்ந்த இளைஞன்!!

1305

வல்வெட்டித்துறையில்..

கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து கீழே இருந்த அந்த நாட்டவரும் மீது குதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரகுபதி ஆனந்த் என்ற இளைஞரும் அந்த நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்