வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த வாகனம் திருத்தும் தொழில் புரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ரூபன் என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இன்று (18.08.2023) பிற்பகல் அவரது மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை கணவரான ரூபன் தூக்கில் சடலமாக கிடந்ததை அவதானித்துள்ளனர்.
தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கிய பின் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடந்த 24 மணி நேரத்தில் வவுனியாவில் விபத்தில் ஒருவரும் , நீரில் மூழ்கி இரு சிறுவர்களும், தற்சமயம் குறித்த குடும்பஸ்தருமாக 4பேர் ஆகாலமரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.