யாழில் வீதி விபத்து : 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

1418

யாழில்..

யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.



இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (24.08.2023) மதியம் கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த வயது 14 சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடையவர் இளைஞன் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சைக்கிள் தீ பிடித்தும் எரிந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.