9 வயது மகளை துஸ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவான தந்தை : பொலிஸார் வலைவீச்சு!!

1963

மாவத்தகமவில்..

தனது 9 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



சமபவத்தில் 29 வயதான மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க எனும் நபரே பொலிஸார் தேடப்படுகின்ற நிலையில் அவரது புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.