கனேடிய அரசில் ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி!!

1068

கனடாவில்..

கனடாவின்- ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.இவர் நேற்றைதினம்(22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்குமுன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.