
கொழும்பு, வௌ்ளவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே வீட்டில் வசித்த 70 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





