புதூரில்..

மதுரை புதூரில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் முன்னாள் ராணுவ வீரரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருடைய மனைவி விசாலினி. மகள் ரமிசா ஜாஸ்பெல். இவர்கள் வாடகை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ரமேஷ் அதன் பின்பு வீட்டுக்கதவை திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கதவை தள்ளி பார்த்த போது அது உள்பக்கமாக பூட்டி இருப்பது தெரியவந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ரமேஷ், அவரது மனைவி, மகள் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர்.

3 பேரும் விஷம் குடித்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்தது. கடனால் மன உளைச்சல் காரணமாக அவர்களின் 3 பேரின் உடல்களை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பாலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரமேஷ் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அதை திரும்ப செலுத்த முடியவில்லை. போலீசார் அங்கிருந்த 25 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் அவர் உருக்கமாக பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நரிமேட்டில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த பெண் தரப்பில் பணம் கேட்டு தொல்லை செய்ததால் தற்கொலை கொண்டதாகவும் அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக தெரிவித்தனர். அந்த பெண் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.





