புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிசாரை கண்டதும் தப்பியோடிய இளைஞன் விபத்தில் பலி!!

1882

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.



வீதியில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.