காதல் திருமணம் செய்து 21 நாள்களில் கணவனுக்கு நேர்ந்த சோகம்!!

630

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம், கர்நாடகா பகுதில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 14 பேரில் ஒருவருக்கு, திருமணமாகி 21 நாள்கள் தான் ஆகியுள்ளது என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரி ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு கடை மற்றும் குடோன் உள்ளது.

இங்கு, பட்டாசுகளை லாரிகளில் கொண்டு வந்து கடை மற்றும் குடோனில் இறக்கி வைத்தனர். அப்போது, திடீரென தீ பிடித்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரில் 7 பேர் தருமபுரி மாவட்டம், டி. அம்மாபேட்டையை சேர்ந்தவர்கள். அதில் வேடப்பன் என்பவரும் ஒருவராவார். இவருக்கு திருமணமாகி 21 நாள்கள் தான் ஆகியுள்ளது.

கடந்த மாதம் 17 -ம் திகதி பி.எட் படித்துள்ள தனது காதலியை வேடப்பன் திருமணம் செய்தார். தீபாவளி சீசன் வந்துள்ளதால் நண்பர்களுடன் வேலை செய்வதற்காக பட்டாசு குடோனுக்கு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு நடந்த விபத்தில் வேடப்பன் உயிரிழந்துள்ளதால் அவரது மனைவி இப்போது தனியாக நிற்கிறார். இதனால், வேடப்பனின் மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.