புத்தளத்தில் வானொன்று பேருந்துடன் மோதி விபத்து : இருவர் காயம்!!

707

புத்தளத்தில்..

புத்தளம் பகுதியில் வானொன்று பேருந்துடன் மோதி, வீதியை விட்டு விலகி உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து புத்தளம் பன்றி இறைச்சி சந்தியில் நேற்று (09.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொழும்பிலிருந்து சித்தாலேப்ப மருந்துகளை ஏற்றிச் சென்ற வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி, பேருந்து மற்றும் வான் வீதியை விட்டு விலகி உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வானில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வானின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர்.பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.