காதல் விவகாரத்தால் யுவதிக்கு நேர்ந்த கதி!!

896

கொழும்பில்..

கொழும்பில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளம் யுவதி ஒருவர் கத்தியால் குத்திப் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.டபிள்யூ அனுதர்ஷினி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவதியின் வீட்டில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யுவதியின் முன்னாள் காதலனைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலும் இருவரைத் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.