
ஒஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னாவில் சாலையோர அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அவர் வித்தியாசமான முறையில் சூரிய குளியலில் ஈடுபட்டார்.
தனது வீட்டு ஜன்னலில் மெத்தையை விரித்து அதன் மேல் நிர்வாண நிலையில் படுத்தபடி சூரிய குளியலில் ஈடுபட்டார். அவரது கால்கள் மற்றும் பின் பகுதிகள் சாலையில் செல்பவர்கள் பார்க்கும்படி இருந்தது. இதைப்பார்த்த ஆண்கள் ஆர்வத்துடன் ரசிக்க தொடங்கினார்கள். ஏராளமான ஆண்கள் அங்கு கூடிவிட்டார்கள்.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொலிசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பலர் அந்த காட்சியை படம் எடுத்தும் சென்றனர்.
இதுபற்றி ஒருவர் கூறும்போது, நான் ஜன்னலை திடீரென பார்த்த போது அழகான பெண் நிர்வாணமாக படுத்திருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது என்றார். அந்த பெண் மீது பொலிசார் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.





