வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 21வது வருட விளையாட்டுப் போட்டி நேற்று (21.06) சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டிக்கு திரு.நா.சேனாதிராசா (சமாதான நீதவான், சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர்) அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களும், சிறப்பு விருந்தினராக Dr.த.முத்துலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.










