வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருப் பகுதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பஸ் மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை தமது கடையினை பூட்டிவிட்டு வீடு நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி மீது இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள நெல்லி ஸ்டார் விருந்தினர் விடுதியருகில் வைத்து அவ் வீதி வழியாக வந்த பஸ் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
இரண்டாம் குறுக்குத் தெரு வவுனியாவில் வசித்து வந்த பி.பத்மினி (42), எஸ்.பந்துலராஜபக்ச (42) ஆகிய இருவருமே காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பத்மினி தலையில் பலத்த காயம் அடைந்துள்ளமையால் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.