
சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கெனவே இதே குற்றத்தினால் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சென்னை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






