இலங்கையின் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், வவுனியா பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவு நாள் இடம்பெற்றுள்ளது.
மாவீரர் நாளான இன்று (27.11.2023) மாலை மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை, பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினர் மாவீரர் நினைவேந்தலை செய்ய அனுமதிக்கவில்லை. இருப்பினும் மாணவர்கள் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.