இரண்டு தமிழ்ச் சிறுவர்கள் தூக்கில் தொங்கி மரணம்!!

579

Hang

கொழும்பு ஹட்டன் வீதியின், எட்டியாந்தோட்டை வீஓய என்ற பெருந்தோட்டத்தில் இரண்டு தமிழ் சிறுவர்களின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மரணமானவர்கள் சிறுமி 7 வயதைக் கொண்டவர். சிறுவன் 3 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறுவர்களின் தாய் வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மரணமான பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.