இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை!!

1033

இலங்கையில்..

இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடி பாரியளவில் இடம்பெறுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மோசடியாளர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.