வீதியை கடக்க முயன்ற சிறுவனை மோதிய வாகனம் : சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

1521

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் உடல் நசுங்கி இன்று பலியாகினார்.

குறித்த சிறுவன் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்ததார்.

இதன்போது சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன் மரணமடைந்துள்ளதுடன் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.