
தர்மபுரி நத்தம் கொலனியில் இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட தர்மபுரியை சேர்ந்த இளவரசன் – திவ்யா தம்பதியினர் பின்னர் பிரிந்து வாழ்ந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு யூலை 4ம் திகதி இளவரசன் மரணம் அடைந்தார்.
தற்போது நடைபெற்ற முதலாமாண்டு அஞ்சலியில் இளவரசனின் பெற்றோரும், ஊர்பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், நீதிமன்றத்தின் தடையால் அரசியல் பிரமுகர்கள், கட்சியினர் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






