இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி…
இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நாளை 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த துவிச்சக்கர வண்டி போட்டி ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன் அதன் நான்காம் கட்டமாக இன்று (06.03.2024) திருகோணமலையிலிருந்து வவுனியா விமானப்படை முகாம் வரையிலான துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
திருகோணமலை – வவுனியா 144.5கிலோ மீற்றர் தூரத்தினை ஓடி முடித்து முதலாவது இடத்தினை கடற்படையினை சேர்ந்த பிரபாஸ் மதுசங்க என்பவரும் இரண்டாவது இடத்தினை கதீரான ஸ்பிட் கழகத்தினை சேர்ந்த உமேஸ் விரசிங்க என்பவரும் மூன்றாவது இடத்தினை இந்தியா வீமானப்படையினை சேர்ந்த கிர்ஷ்ண நாணயக்கொடி என்பவரும் பெற்றிருந்தனர்.
குறித்த போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இறுதி நாளான நாளையதினம் 7ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.