வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம் திறந்து வைப்பு – நியமனக்கடிதமும் வழங்கி வைப்பு

909

ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம்…

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலமைக்காரியாலம் இன்று (13.03.2024) மாலை 4.00மணியளவில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா அமைப்பாளர்களான பிரியதர்சினி ரசிக்கா மற்றும் ச. நிரேஷ்குமார் , அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச இணைப்பாளர்களுக்கான நியமனக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுக்கு தேர்தல் தொடர்பிலான விளக்கங்களையும் கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கியிருந்தார்.