உலக அழகி ப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கைப் பெண் நாட்டிற்கு வருகை!!

1701

அமெரிக்காவில் (United States of America) இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி (Thushari Jayakody) நாடு திரும்பியுள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில் நடைபெற்ற இந்த உலக அழகிப் போட்டியில் 37 நாடுகள் பங்குபற்றியிருந்தது.

அத்துடன், 37 நாடுகளுக்கிடையிலான பெரும் போட்டிக்கு மத்தியில் இலங்கையின் சார்பில் உலக அழகி பட்டத்தை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக துஷாரி ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று பிள்ளைகளின் தாயான நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இவர், மலேசிய விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.