வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

1024

வவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரு சாரதிகளை நேற்றிரவு (02.05) வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை தடுக்கும் நோக்கில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கில் ஆகிய இரு வாகனங்களின் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் செலுத்திச் சென்ற இரு வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.