மலேசியா சென்ற இலங்கை தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

534

மலேசியாவுக்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞன் அங்கு பொயிலர் வெடித்து உயிர்ழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (வயது 24 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இருந்து மலேசியாவில் உள்ள மினரல் வோட்டர் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பணிக்கு சென்றிருந்தார்.

இந்த அனர்த்தம், ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ள நிலையில் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.