வீதியை விட்டு விலகி வாய்க்காலுக்குள் பாய்ந்த ஹயஸ் வாகனம்!!

888

இன்று(30) அதிகாலை மூதூரில் வீதியில் பயணித்த ஹயஸ் வாகனமொன்று தடம் புரண்டு வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மூதூர் பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் ஹயஸ் வாகனம் தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹயஸ் வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்திருந்த நிலையில் விபத்தின் போது சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

மேலும் வித்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்