இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!!

1264

கண்டி, கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹரிவதனி என்ற உயர்தர மாணவி வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் (0781713389 டிலாந்தினி) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.