வவுனியா DCDB யினரால் 20இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்கள் மீட்பு : ஒருவர் கைது!!

1388

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டு வைத்திருந்த ஒரு தொகை மரங்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் (DCDB) மீட்கப்பட்டுள்ளதுடன், அதேபகுதியை சேர்ந்த 30வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர. இதேவேளை மீட்கப்பட்ட மரங்களையும் சந்தேக நபரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.



வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சாமந்த விஜயசேகர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்(SSP) மாலின் அஜந்த பெரேரா உத்தரவின் பேரில்,

மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்(DCDB) பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ண தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே (DCDB) சூட்சுமமாக செயற்பட்டு குறித்த மரங்களை மீட்டெடுத்துள்ளமையுடன் சந்தேக நபரையும் கைது செய்திருந்தனர்.