வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம்-2014 – கொடியேற்றம்!!

375

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இன்று கொடிஏற்றம் நேற்று காலை பதினோரு மணிக்கு கொடியேற்ற உற்சவம் இடம் பெற்றது.

தொடர்ந்து கொடிதம்ப பூஜை இடம்பெற்று அம்பாள் ரிஷப வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள். மீண்டும் மாலை ஐந்தரை மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி இரவு ஏழு மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுகள் யாவும் வவுனியா நெற் இணையதளத்தின் ஊடக அனுசரணையுடன் இடம்பெறுகிறது. தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.

-கஜேந்திரன்-

11 12 13 14 15 16 17 19 20 21 22