கேரளாவில் பாறைக்கு நடுவில் உயிருக்கு போராட்டம் : வெளியான காணொளி!!

458

கேரளாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 100 ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த திடீர் அனத்தம் இந்தியாவை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் வேகமாகப் பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் சேற்றில் மூழ்கிய நிலையில் ஒரு பெரிய பாறையை பிடித்துக் கொண்டு நபரொருவர் உயிருக்குப் போராடும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

அவரைக் காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழந்துள்ளது.



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நபர், பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார். எனினும், நிலச்சரிவினால் ஏற்பட்ட சேறுகளில் சிக்கி அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.

எனினும், தொடர்ந்து எழுந்து நிற்க முயற்சித்து உயிர் பிழைக்க சிரமப்பட்டு வருகிறார். 2வயநாடு – முண்டக்கை டவுன் பகுதியில் நேற்று (30.07)அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.