வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சோகம்!!

1478

வவுனியாவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், வவுனியா – போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலனிகம கிராம வயல் பகுதியில் இன்று(26) காலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.