யாழில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

653

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.09.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சாவகச்சேரி – நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வினோத் என்ற குடும்பஸ்தரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.