தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் : குவியும் பாராட்டுக்கள்!!

345

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவன் வெண்கல பதக்கத்தை வென்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 31-10-2024 ஆம் திகதி முதல் 05-11-2024 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டியில் வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவன் சத்தியராசா யதுர்சன் 20 வயது பிரிவினருக்கான 60.64 Kg எடை பிரிவில் பங்குபற்றி வெண்கல பதக்கத்தை பெற்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை, பயிற்றுவிப்பாளர் குருபரன் நிதீஸ் பயிற்றுவிப்பில் பதக்கம் பெற்ற மாணவனை பாடசாலை, சமூகத்தினர் பாராட்டுவதோடு, இவ் பாடசாலைக்கு முதன் முதலாக விளையாட்டில் தேசிய பதக்கத்தை கொண்டு வந்த மாணவர் என்ற பெருமையையும் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.