தமிழகத்தில் இருந்து தப்பி வந்த 09 இலங்கையர்கள் யாழில் கைது!!

522

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை யாழ்ப்பாணம் நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த திருகோணமலை மன்னார் மற்றும் முல்லைத்தீவு , ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் படகொன்றில் சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.