30 பேருடன் பயணித்த தனியார் பேருந்து கோர விபத்து!!

1996

பதுளை, படலபிட்டிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (10.11.2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் சுமார் 30 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து படலபிட்டிய பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியார் பஸ் விபத்துக்குள்ளான போது, ​​வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்த நிலையில் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.