விவகாரத்து வழக்கில் 400 கோடி ஜீவனாம்சம் கேட்கும் ஹிருத்திக் மனைவி!!

304

Krithik

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் மனைவி சூசேனா, தனது கணவரிடம் விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க ஜீவனாம்சமாக 400 கோடி ரூபாய் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், மனைவி சுசானேவும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர், இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.சமீபத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலும் சுசானேயும் நெருக்கமாக பழகுவதே இவர்கள் தகராறுக்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், விவாகரத்து பற்றி ஹிருத்திக் ரோஷனே அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து விவாகரத்துக்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கியுள்ள நிலையில் விவாகரத்துக்கு சம்மதிக்க தனக்கு ஹிருத்திக் ரோஷன் 400 கோடி ஜீவனாம்சம் தர வேண்டும் என்று சுசானே கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஹிருத்திக் ரோஷனும் அந்த தொகையை கொடுக்க சம்மதித்து விட்டார் என்றும், ஆனால் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாக வாங்கியதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.