தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் விரும்பும் இசையமைப்பாளர் ஆகிவிட்டார் அனிருத். இவர் தற்போது கத்தி படத்தில் பிஸியாக இசைக்கோர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் கத்தி படத்தின் பாடல்கள் கொஞ்சம் டல்லடிக்க, எதார்த்தமாக டாணா பாடல்களை முருகதாஸ் கேட்டுள்ளார். அது மிகவும் பிடித்தப்போக அந்த பாடலை கத்தி படத்தில் சேர்த்துவிட்டார்களாம்.
பெரிய படம் என்பதால் அனிருத்து வாய் திறக்கவில்லையாம். இன்னும் சில நாட்களில் டாணா திரைப்படம் திரைக்கு வருவதால் என்ன செய்வது என்று புரியாமல் படக்குழு அனிருத்திடம் புலம்புவதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.