மாத்தளை – பல்லேபொல, மடவலை வீதியின் நாரங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.