வவுனியாவில் புகையிரதம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

1401

வவுனியாவில் ரயிலில் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (31) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 44 வயதுடைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.