வெளிநாட்டு தம்பதி பயணித்த வாகனத்தில் மோதுண்ட இளைஞன் பலி!!

425

அனுராதபுரத்தில் வெளிநாட்டு தம்பதியினர் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கவரக்குளம் A13 வீதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததாக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 31 வயதுடைய தொழிலாளி என தெரியவந்துள்ளது.



அனுராதபுரத்திலிருந்து கவரக்குளத்தை நோக்கிச் சென்ற கார் ஒன்றும், கவரக்குளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கடவத்தையை சேர்ந்த 59 வயதுடைய மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.