
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) வெளியாகின. அதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த,
வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் 3A சித்திகளுடன் பாடசாலையில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தந்தையில்லாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னின்றாலும் தனது முயற்சியில் சாதனை படைத்துள்ளார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.





