கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் மழை காரணமாக வெல்லவாய, கிரிந்தி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லவாய, தெலுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் ஆவார்.
இதேவைள, நேற்று வியாழக்கிழமை கிரிந்தி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன நபரை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.