மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து : இளம் பெண் உயிரிழப்பு!!

2724

அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவல வீதியில், ஞாயிற்றுக்கிழமை (18) மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், கலபிடமட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் பெண் ஆவார்.

அத்தனகல்லவிலிருந்து அலவல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்து வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.