இலங்கைத்(Sri Lanka) துறைமுக நகருக்குப் போட்டியாக மாலைதீவிலும் துறைமுக நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள துறைமுக நகரம் தென்னாசியாவின் மிகச்சிறந்த முதலீட்டு வலயமாக உருவெடுக்கும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் அதில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் துறைமுக நகரையொத்த முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மாலைதீவு மேற்கொண்டுள்ளது.
அதற்காக கட்டார் அரசாங்கம் 800கோடி அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. குறித்த முதலீட்டு வலய முதலீட்டாளர்களுக்கு முழுமையான வரி விலக்க அளிப்பதற்கு மாலைதீவு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.