நாடு முழுவதும் பல இடங்களில் திடீர் மின் தடை!!

564

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று காலை திடீர் மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை 7.40 மணியளவில் மின் தடை ஏற்பட்டதால், போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பு செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனினும் சில பகுதிகளில் காலை 8 மணியளவில் சுமார் 20 நிமிடங்களுக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டன.

ஏனைய பகுதிகளில் சில மணி நேரங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திடீர் மின் தடை குறித்து மின்சார சபை இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.