லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி!!

436

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே வாகன விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.