வவுனியாவிலிருந்து புதூர் நோக்கி விஷேட பேரூந்து சேவை!!

704

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு வவுனியாவிலிருந்து விஷேட பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தனியார் மற்றும் அரச பேரூந்தின் ஒத்துழைப்போடு வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இச் சேவை நடைபெறுகின்றது. இன்று (23.06.2025) காலை முதல் நாளை (24.06.2025) காலை வரை இந்த விஷேட பேரூந்து சேவை நடைபெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் வருடாந்த பொங்கல் விழாவினைக் காண புதூர் நோக்கி சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.