யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி, முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (30.06.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேனும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இரு வாகனங்களும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தின் போது உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் முற்றிவும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.